"பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்திற்கு, 2.67 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை(தலைமை செயலகம்)
* இரண்டு, லேப் - டாப், சர்வர், 20 கம்ப்யூட்டர், 20 வானவில் தமிழ் மென்பொருள் உள்ளிட்டவை, 20.23 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
* மொத்தம், 46.65 லட்சம் ரூபாய் செலவில், சிறப்பு பணிப்பிரிவு நிலையங்கள் அமைத்தல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், 1.92 கோடி ரூபாய் செலவில், கணினி வழி தேர்வு கூடம் அமைத்தல்
* தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு, 7.98 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கணினி மற்றும் துணை பாகங்கள் வாங்கப்படும்.
* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு, 7.98 லட்சம் ரூபாய் செலவில், 22 "லேப் டாப்' கள் வாங்கப்படும்.
* அண்ணா மேலாண்மை நிலையத்திற்கு, 6.42 லட்சம் ரூபாய் செலவில்,"ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' மற்றும் யூபிஸ் பவர் கருவிகள் வாங்கப்படும்.
* பவானி சாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி மையத்திற்கு, 5.33 லட்சம் ரூபாய் செலவில், கணினி "லேப்' சீரமைக்கப்படும்.
* அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், நெல்லை மற்றும் சென்னை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு, 1.47 லட்சம் ரூபாய் செலவில், கம்ப்யூட்டர், பேக்ஸ், லேசர் கருவிகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் போன்றவை வாங்கப்படும் என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment