கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, April 2, 2013

    குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

    டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சமீபத்தில் நடந்த குரூப் 4 போட்டி தேர்வில், பி.எட்.,ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் தேர்வு பெற்றனர். 


    இவர்கள், அரசின் மற்ற துறைகளில் பணியில் சேர்வதை விட, கல்வித்துறையில் "டைப்பிஸ்ட்' இளநிலை உதவியாளர்களாக விரும்பி சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. பி.எட்., அல்லது ஆசிரியர் பயிற்சி முடித்து, கல்வித்துறையில் பணியாற்றுவோருக்கு 2 சதவீதம் ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆண்டுதாறும் இந்த 2 சதவீத பணியிடத்தை
    நிரப்பும்போது,வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியர் பணிக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.கல்வித்துறையினர் கூறுகையில், ""கடந்த காலங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் டி.என். பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வு எழுதுவது மிக குறைவு. தற்போது, பி.இ.,முடித்தவர்கள் கூட, 10ம் வகுப்பு தகுதியான குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர். அதிர்ஷ்டவசமாக தேர்ச்சி பெறும்போது, அரசு பணி என்ற ஒரே காரணத்தால் பணியில் சேருகின்றனர். கல்வித்துறையில் பணி மூப்பில் 2 சதவீத ஆசிரியர் வாய்ப்பு இருப்பதால் ஆசிரியர் பயிற்சி முடித்தோர் இத்துறையை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்,'' என்றனர்.

    No comments:

    Post a Comment