click here download to call letter
இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள,விண்ணப்பாதாரர் விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங் வருவோர், உரிய சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேரடி தேர்வு, சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது தேர்வு மையங்களில், வரும், 7ம் தேதி காலை மற்றும் மதியம் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment