தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ், பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று (5ம் தேதி) துவங்கி, ஜூலை, 26ம் தேதி வரை வழங்கப்படுகிறது.விண்ணப்பங்களை, சென்னை அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி, கோவை எஸ்.என்.ஆர்.,
கல்லூரி, நாகர்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரி, மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி, திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி, பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் பெறலாம். மேலும், சென்னை ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, கோவை, என்.ஜி.பி., கல்வியியல் கல்லூரி, நெல்லை இன்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் உமா மகேஸ்வரனார் கல்வியியல் கல்லூரி, திருவண்ணாமலை கிரசன்ட் கல்வியியல் கல்லூரி, ராசிபுரம் கஸ்தூரிபாய் காந்தி கல்வியியல் கல்லூரி, மதுரை கபி கல்வியியல் கல்லூரி, கடலூர் பவானி கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்களிலும் விண்ணப்பங்கள் பெறலாம். "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை-600 015' என்ற முகவரிக்கு, 550 ரூபாய் டி.டி., எடுத்து, தபால் மூலமோ அல்லது 500 ரூபாய் செலுத்தி நேரிலோ, விண்ணப்பங்களை பெறலாம். பி.எட்., படிப்பிற்கான நுழைவு தேர்வு, ஆகஸ்ட், 25ம் தேதி நடக்க உள்ளது. நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கை அக்டோபரில் துவங்க உள்ளது. மேலும், விவரங்களுக்கு, 044-2430 6657, 2430 6658 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment