கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, December 31, 2012

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு:கல்வித்துறை ஏற்பாடு

    அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் அமையும் நோக்கில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கடந்தாண்டு கல்வித்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்திருந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலும், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தது. நடப்பாண்டில், சரிந்துள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வியாண்டு துவக்கம் முதல், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடக்கிறது. பொங்கல் விடுமுறை முடிந்தவுடன், அரையாண்டு தேர்வு மதிப்பெண் கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் கூடுதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஏற்கனவே, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கற்றல் முறை புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பாடங்களுக்கு, பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் மாணவர்களுக்கு, பாடம் வாரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சியும், எழுத்து தேர்வுக்கு தயாராகும் முறை, மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பாடங்கள் குறித்து அந்தந்த பாட ஆசிரியர்கள் மூலம் தெளிவாக விளக்கப்படுகிறது. இதன்மூலம், நடப்பாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,

    No comments:

    Post a Comment